புத்தாண்டில் பைக் ரேஸ் விட்ட வாலிபர்கள்…! ஒருவர் பலி…! ஏழு பேர் கவலைக்கிடம்….! - Seithipunal
Seithipunal


 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, சிந்தானபுரத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 22). டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, நான்கு பைக்குகளில், பழநி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணைக்குச் சென்றார். அவர்கள் போகும் போது,  நான்கு பைக்குகளும் வேகமாகச் சென்றதாக, வழியில் உள்ள மக்கள் கூறினர்.

குதிரையாறு அணைக்குச் சென்று, மாலையில் ஊருக்குத் திரும்பினார்கள். அப்போது, மிக வேகமாக, யார் முதலில் செல்வது? என்று பந்தயம் கட்டி, பைக் ரேஸ் வைத்துள்ளனர்.

இதனால், பைக்குகளி்ல், அவர்கள் கண் மண் தெரியாத வேகத்தில் சென்றனர். அவர்கள் சென்ற சாலை குண்டும் குழியும் நிறைந்தது. இந்த நிலையில், மிக வேகமாக பைக்குகள் ஒன்றை ஒன்று முந்துவதற்காக, சுற்றுப்புற சூழ்நிலையை மறந்து, பறந்து சென்றன.

சந்தன்செட்டிவலசு என்ற பகுதியில் அருகே இவர்கள் வந்த போது, ஒருவரை ஒருவர் முந்த முயன்றதில், நான்கு பைக்குகளும், ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின.

இந்த 4 பைக்குகளில் பயணம் செய்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்ட, அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.

பழனி அரசு மருத்துவமனையில், இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சரண்ராஜ் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.

புத்தாண்டு ரேஸ் இவரது உயிரைப் பலி வாங்கி விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one person passed away in bike race


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->