தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கை விசாரிக்கும் ஆணையத்திற்கு தடையா.? உயர் நீதி மன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் ஆணையம் விசாரணை  நடத்தலாம் என்று அறிவித்தது மதுரை உயர்நீதிமன்றம்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு,  ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டிருந்தது. தனி நபர் விசாரணை ஆணையத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்  தனி நபர் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு அமைத்த தனி நபர் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One Person Commission Not BAN High Court New Judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->