#BREAKING_NEWS சற்றுமுன் ஃபெதாய் புயல் உருவாகியது.! வானிலை மையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் பெதாய் என்ற புயல் உருவாகி உள்ளதா காரணமாக, சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சற்றுமுன் ஃபெதாய் புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி 11 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், தற்போது இந்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து கிழக்கே 800 கி.மீ. தூரத்தில் நிலைக் கொண்டுள்ளதாகவும் அது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் நாளை மறுநாள் பிற்பகல் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மற்றும் காக்கி நாடா இடையே கரையை கடக்க உள்ளது. இந்த ஃபெதாய் புயல் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் ஆந்திர மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று கனமழையும் நாளை அதிக கனமழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் ஃபெதாய் புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NOW PETHAI CYCLON


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->