புதர்மண்டிக் கிடக்கும் இடத்துல.. நைட் ஆன இந்த வேனுக்குள்ள என்ன நடக்குது தெரியுமா..? பதறியடித்து பார்க்கும் பொதுமக்கள்.!
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பேரூராட்சிப் பகுதியில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பேரூராட்சிப் பகுதியில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பேரூராட்சிக்கு உள்பட்ட முதல் வார்டு பகுதியான புரவூரில் உள்ள சாலையோர தோட்டத்தில் பழுதடைந்த நிலையில் ஒரு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தையொட்டி மறைவான பகுதியில் தினமும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து, பகல், இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், மது அருந்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் அத்துமீறல் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அப்பகுதி வழியாக நடந்து செல்லவே பயப்படுகிறார்கள்.
காவல்துறை உரியநடவடிக்கை மேற்கொண்டு, புரவூர் பகுதியில் குடிமகன்களின் தொந்தரவுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.
தற்போது இது குறித்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.