அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் வானிலை! அதிகாரபூர்வ அறிவிப்பு!! வதந்திகளை நம்ப வேண்டாம்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அதிகாரபூர்மாக தெரிவித்துள்ளது. 

இன்று (17.12.2018) சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ''மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் பெய்ட்டி புயல், தொடர்ந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் (இன்னும் சற்று நேரத்தில்) கரையை கடக்கும்'' என்று தெரிவித்தார். 

மேலும், இந்த புயல் காரணமாக இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். எனவே மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே புயல் சம்மந்தமாக வரும் வதந்தி செய்திகளை யாரும் நம்பவேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 3 days weather report for tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->