மாடு கட்டும் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்ட புது மணப்பெண் - திருமணமாகி 4 நாட்களில் நடந்த துயரம்..? மணமகன் வீட்டாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
newly married women suicide
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் காயத்திரி (22).
காயத்திரிக்கும் சின்னசந்தவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடந்தது.
மணமக்கள் இருவரும் காயத்திரி வீட்டில் இருந்தனர்.இந்நிலையில்மணமகன் வீட்டில் இருந்து 5 பேர் வந்து ராஜேசையும் காயத்திரியையும் அழைத்துச் செல்ல வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காயத்திரி, வீட்டில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று மாடு கட்டும் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காயத்திரியை மீட்டு தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயத்திரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காயத்திரி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட காயத்திரிக்கு திருமணமாகி 4 நாட்களே ஆவதால் செய்யாறு உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
newly married women suicide