திருமணமாகி ஒரு மாதத்திலேயே மனைவியை கொன்ற கணவன்!. அதிர்ச்சி சம்பவம்!.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையக்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றுபவர் பாலகுரு, இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
இவருக்கு கடந்த மாதம் வேலம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்திலேயே இவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலம்மாளுடன் சந்தேகத்துடன் பேசி இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கடும் கோபம் கொண்ட பாலகுரு தனது மனைவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவல் அறிந்து விரைந்த போலீசார் பாலகுருவை கைது செய்தனர்.திருமணமாகி ஒரு மாதத்திலேயே மனைவியை கொடூரமாக கொலை செய்த அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
newly married husband killed his wife