காரை வாடகைக்கு வாங்கி..! அதை வைத்து கோடி கணக்கில் சம்பாதித்த பலே கில்லாடி..!!! ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஞான பிரசாத். இவர் கரூரில் சொந்தமாக ஃபேன்சி கடை நடத்தி வந்தார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால், அதைச் சரிக்கட்ட கந்து வட்டிக்கு லட்சக் கணக்கில் பணம் கடனாக வாங்கினார்.

அதையும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால், மோசடியாக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு, கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த நண்பரான கார் புரோக்கர் புருஷோத்தமனை கூட்டு சேர்த்துள்ளார்.

பின் கரூரில் பழக்கமான ராஜா என்பரைத் தொடர்பு கொண்டு பேசிய ஞான பிரசாத், “தெரிந்த தொலை தொடர்பு கம்பெனிக்கு, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை கிடைக்கும்” என்றார்.

இதனை நம்பி ராஜாவும், தனது காரை அவரிடம் கொடுத்துள்ளார். ஞான பிரசாத் அந்த காரை அடமானம் வைத்து, 2 லட்ச ரூபாய் பணம் பெற்றார். பின், அந்தப் பணத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை, கரூர் ராஜாவிடம் கொடுத்துள்ளார்.

ஒரு மாதம் முடிவதற்குள் வாடகை பணம் வந்து விட்டதே, என்று வியந்த ராஜா, தனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் இந்த விஷயத்தைச் சொல்லி உள்ளார். இதை நம்பி 17 பேர், தங்களது கார்களை, ஞான பிரசாத்திடம் கொடுத்துள்ளனர்.

அவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக அடமானம் வைத்து, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் ஞான பிரசாத். பின், குறிப்பிட்ட நாள் கடந்தும், வாடகை வராததால், காரின் உரிமையாளர்கள் பணம் கேட்ட போது, பணமும் கொடுக்காமல், வண்டியையும் கொடுக்காமலும் இழுத்தடித்துள்ளார்.

இதனால், காரின் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளி்த்தனர். போலீசாரும், ஞான பிரசாத் மற்றும் புருசோத்தமனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், கோவை, ராமநாதபுரத்தில் அந்த இருவரும் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போது, போலீசார் அவர்களைக் கைது செய்து, 18 கார்களையும் மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW TECHNIC IN CAR BROKER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->