இந்தியாவில் அதிகரிக்கும் சிலை நிறுவும் கலாச்சாரம்! விரைவில் தமிழகத்திலும் சிலை!
New Statue Tamilnadu minister say
இந்தியாவில் சிலை வைக்கும் கலாச்சாரம் அண்மையில் அதிகரித்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நாமதா நதிக்கரையில், 597 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை தான் உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதை அடுத்து, காவிரியில், சிலை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து, ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.406 கோடி மதிப்பில் 60 அடி உயரத்தில் என்.டி.ராமராவ் சிலை அமைக்கபட இருகிறது. மேலும், தெலுங்கானாவில், மிக உயரமான சட்டசபை அமைக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில், ரூ 5 கோடி மதிப்பில் மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
English Summary
New Statue Tamilnadu minister say