தமிழக மக்களே உஷார்! நடக்கும் புதுவிதமான மோசடி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தொண்டபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 58). இவரிடம், திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கி ஊழியர் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோர், பெரியசாமிக்கு வங்கியில் விவசாயக் கடன் வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
    
இதற்காக, அவர்கள், பெரியசாமியை, திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். பெரியசாமியும் சென்றார்.அங்குள்ள ஒரு டீக்கடையில், அவர்கள் சந்தித்தனர். பின், வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்று துவக்க வேண்டும், என்று கூறி, பெரியசாமியிடம் இருந்த 2700 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டனர். வங்கி பாஸ் புத்தகத்திற்காக, பெரியசாமியை ஒரு போட்டோவும் எடுத்துள்ளனர்.
    
பின், நான்கு நாட்கள் கழித்து, அவரிடம், பேங்க் பாஸ்புக் மற்றும் வங்கியின் செக் புத்தகத்தைக் காட்டி, விவசாயக் கடனுக்கு, அந்த செக்கில் கையெழுத்து போடும் படி கூறினர். பெரியசாமியும், அவர்கள் சொன்னதை நம்பி, 5 பிளாங்க் செக்குகளில், கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார். 

கடந்த 9.5.2018 அன்று, பெரியசாமிக்கு, அந்த வங்கியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதைப் படித்தவர் அதிர்ந்தார். அதில், பெரியசாமி, 3 பேருக்கு தலா 3 லட்ச ரூபாய் வீதம் செக் கொடுத்திருப்பதாகக் கூறப் பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த வங்கிக்கு சென்ற பெரியசாமி, தான் விவசாய கடன் வாங்குவதற்குத் தான், செக்குகள் வழங்கியதையும், தன் பேரில், 9 லட்ச ரூபாய்க்கு பண மோசடி செய்திருப்பதையும், வங்கி மேலாளரிடம் சுட்டிக் காட்டி, இது குறித்து, நடவடிக்கை எடுக்கும் படி, காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new plan to cheat un knoeladgable people


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->