மகனுடன் இரத்தவெள்ளத்தில் மிதந்த தாய்.! பெண்ணின் நகத்தால் வெளியான புதுமாப்பிள்ளையின் கொடூரமுகம்!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பெருமாள் தாங்கல் புதூர் கிராமம் பகுதியில் வசித்து வருபவர் வனப் பெருமாள். இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி.இவர்களது மகன் போத்திராஜ்.

இந்நிலையில் சமீபத்தில் வனப்பெருமாள் இரவு பணிக்காக சென்றநிலையில் வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமியின் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு, அவரது கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 26 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் அருகில் இருந்த மகன் போத்திராஜையும் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.


அப்பொழுது கொலை செய்யப்பட்டு இறந்த விஜயலட்சுமியின் நகத்தில் ரத்தம் மற்றும் தோல் இருந்துள்ளது. அதனை ஆய்வு செய்தபோது அது அப்பெண்ணிடம் இரத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

 மேலும் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது இரத்த மாதிரிகளை சோதனை செய்து பார்த்த போது பெண்ணின் கையில் இருந்தது வெங்கட்டின் இரத்தம் என்பது உறுதியானது.

 அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில், வெங்கட்டிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமண செலவிற்காக விஜயலட்சுமியின் வீட்டிற்கு வெங்கட் திருட சென்றுள்ளார்.

அப்பொழுது விஜயலட்சுமி அவரை தடுத்ததால், வெங்கட் அவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்நிலையில்  உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக விஜயலட்சுமி போராடியபோது வெங்கட் கழுத்தில்  கீறியுள்ளார். ஆனாலும் வெங்கட் இரக்கமின்றி விஜயலக்ஷ்மி அவரது மகன் இருவரையும் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEW GROOM MURDER WOMEN FOR JEWELS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->