நாமக்கல் அருகே: வீட்டு மாடியில் வெடி வெடித்து! உடல் சிதறி ஒருவர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், தூசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலுசாமி. இவருக்கு 60 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டு வெடிகளை தயாரித்து கோவில் திருவிழாக்களில் வெடித்து வருகிறார்.

தற்போது கோவில் திருவிழாக்கள் துவங்கி நிலையில் நாட்டு வெடிகளை அதிகளவு தயாரிக்கும் பணியில், அவர் வசிக்கும் 2 அடுக்கு மாடி வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் வெடிகளை அனுமதியின்றி உயர்வேதி பொருட்களை கொண்டு, நட்டு வெடிகளை தயாரித்து வந்துள்ளார்.

இன்று வெடிகளை சாக்கு மூட்டையில் அள்ளி ஒரு அறையில் வைத்துள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக வெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பற்றி பயங்கர சதத்துடன் நாட்டு வெடிகள் வெடித்ததில் பாலுசாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவத்தின் போது பாலுசாமியை காப்பாற்ற முயன்ற ஜெயசந்திரன் உள்ளிட்ட இருவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த வீடுகளின் கூரை மற்றும் ஓடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த போலீசார், வருவாய் துறையினர் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Near Namakal The explosion at the house floor One person lost his body


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->