கண் முன்னே அண்ணனை கொலை செய்த கும்பல்.! வேடிக்கை பார்த்த போலீஸ்.!!
கண் முன்னே அண்ணனை கொலை செய்த கும்பல்.! வேடிக்கை பார்த்த போலீஸ்.!!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சகோதரர்கள், காளிதாஸ் மற்றும் அவரது தம்பி முருகேசன், இவர்கள் இருவரும் பேரையூர் கடைவீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 50 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் வந்து காளிதாஸ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அதனைத் தடுக்க முயன்ற முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலை செய்யப்பட்ட காளிதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது தலையில் பலத்த காயத்துடன் ஓடி வந்த காளிதாஸின் தம்பி முருகேசன் தன் அண்ணனின் கொலைக்கு முழு காரணமும் போலீசார் தான் என செய்தியாளர்களிடம் கூறிய குற்றச்சாட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவர் கூறியதாவது, என் அண்ணனை அந்த கும்பல் தாக்கிய போது தாக்குதல் நடத்திய கும்பலை தடுக்காமல், என்னையும் தடுக்க விடாமல் குண்டுக்கட்டாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்து விட்டனர்.அதனால் தான் என் அண்ணன் இறந்தார், என கண்ணீருடன் தெரிவித்த முருகேசன் அந்த கும்பலின் தலைவர்களான, ஆனையூர் கிராமத்தை சேர்ந்த அழகுராஜா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரிடம் பணத்தை பெற்றுகொண்டு, கொலைக்கு போலீசாரே துணை போய்விட்டனர் எனவும் தெரிவித்தார் முருகேசன்.
English Summary
Murdered brother before brothers eye Funny police