தாயாருடன் நெருக்கமாக இருந்த இளைஞன்! மகன் எடுத்த கொடூர முடிவு!
murder in medical college
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் துணை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரின் மகன் தமிழ் செல்வன். இந்நிலையில் நேற்று இவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனை வளாகத்தில் ஒக்கூரை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், தமிழ் செல்வனுக்கும் திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு ஏர்பட்டது. ஒருகட்டத்தில் அருண்குமார் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தமிழ் செல்வனை சரமாரியாக குத்தினார்.
ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொலை செய்த அருண்குமார் போலீசார் வரும் வரை சம்பவ இடத்திலேயே காத்திருந்தார்.
இதனையடுத்து அருண்குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன், அருண்குமாரின் தாயாருடன் பழக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அருண்குமார் இருவரையும் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்களது பழக்கம் நீடித்தது.
அருண்குமாரின் தாயார் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் அருண்குமார் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வன் இருப்பதை தெரிந்துகொண்ட அருண்குமார் மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்த தமிழ்செல்வனிடம் தாயார் குறித்து விசாரித்துள்ளார். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த சம்பவம் நடந்துள்ளது.
English Summary
murder in medical college