இளைஞனின் பிறப்புறுப்பை துண்டித்து கொடூரமான கொலை!! அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். சமயல் கலை படித்துள்ள சூர்யா பவுஞ்சூரை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாழ்ந்துவந்துள்ளார்.

இந்தநிலையில் சூர்யாவின் மனைவி காயத்ரி ஐந்து மாத இருந்துள்ளார். இதனால் கடந்த வாரம் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார் காயத்ரி. இந்தநிலையில் சூர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மேலேரிபாக்கம் ஏரி பக்கத்தில் ஒருவர் மிகவும் மோசமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் சூர்யா. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மேலேரிபாக்கத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு சூர்யா திருமணம் செய்து வைத்ததால் அந்த பெண்ணின் அண்ணன் ஹரி உள்பட 4 பேர் சூர்யா வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் சூர்யாவை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று  சூர்யாவின் கழுத்தை அறுத்தனர். மேலும், ஆத்திரம் தீராமல் அவரது பிறப்புறுப்பையும் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் . குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in chengalpet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->