தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்..? படுபயங்கர சதியை அம்பலப்படுத்திய அரசியல் பிரபலம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

https://img.seithipunal.com/large/large_a5195204-ffea-431d-9860-cae10615171f-20719.jpg

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.

தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது.

இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.

நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது' என்று கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muralidhar-Rao-said-DMK-plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->