அடிக்கடி தகராறு... 2 குழந்தைகளின் தாய் விபரீத முடிவு...! ஆர்.டி.ஓ. விசாரணை...!
Mother of 2 commits suicide by hanging himself in dharmapuri
கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் பகுதியை சேர்ந்தவர் சரவதி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தமிழ்ச்செல்வி கணவரை பிரிந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இருப்பினும் வாழ்க்கையில் வெறுப்படைந்த தமிழ்ச்செல்வி மனவேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து உறவினர்கள் தமிழ்ச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தமிழ்ச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தருமபுரி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
Mother of 2 commits suicide by hanging himself in dharmapuri