இந்தியாவின் அழகான இரயில் நிலையம்.! இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை!! அப்படி என்ன சிறப்பு தெரியுமா?!
இந்தியாவின் அழகான இரயில் நிலையம்.! இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை!! அப்படி என்ன சிறப்பு தெரியுமா?!
மத்திய ரெயில்வே வாரியம், ''இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்'' என்ற தலைப்பில் ஆய்வு செய்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த மதுரை இரயில் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும்படி மத்திய இரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மதுரை இரயில் நிலைய கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இரயில் நிலையங்களை அழகுபடுத்தும் விதமாக, ஓவியங்கள் வரையுறுமாறு உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் மதுரை இரயில் நிலையம் முழுவது கண் கவரும் படி அழகான ஓவியங்கள் வரைய பட்டன.
இந்நிலையில், ''இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்'' என்ற தலைப்பில் மத்திய இரயில்வே வாரியம் ஆய்வு செய்தது. அதில் மதுரை ரெயில் நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் கண்கவரும் படியும், நேர்த்தியான முறையில் வரையப்பட்டிருந்ததை பார்த்த ஆய்வாளர்கள். மதுரை இரயில் நிலையத்திற்கு இரண்டாவது இடத்தை அளித்தனர்.
இதனையடுத்து, புதுடெல்லியில் இதற்கான பரிசளிப்பு விழா, இரயில்வே மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் நடந்தது. அப்போது, மதுரை இரயில் நிலைய வளாகத்தில் ஓவியம் தீட்டிய கலைஞர்கள் ரமேஷ் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு 5 லட்சம் ருபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
English Summary
MOST BEAUTIFUL RAILWAY STATION