தலைக்கு 4 லட்சம்... மொத்தமா 6 கோடி...! இருந்தவளிடம் கேட்டாள்..! இறந்தவனை கேள் என்றாள்..!! விருதுநகரை கதறவிட்ட ஆசாமி..!!
தலைக்கு 4 லட்சம்... மொத்தமா 6 கோடி...! இருந்தவளிடம் கேட்டாள்..! இறந்தவனை கேள் என்றாள்..!! விருதுநகரை கதறவிட்ட ஆசாமி..!!
விருதுநகர் கல்வி மாவட்ட ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் கீழ் நிலை அலுவலராக செல்வராஜகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, கல்வி இயக்குநர், உயர் கல்வி இயக்குநர் ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருந்தது.
இவர் தன்னுடன் பணியாற்றிய பலரிடம், “பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான உத்தரவை, கல்வித்துறை இயக்குநர்கள் மூலமாகப் பெற முடியும். ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
இவரது பேச்சை நம்பி, அவர்களும் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தனர். இதனால், வேலை கிடைக்கும் என்ற ஆசையில், பலர் செல்வராஜகுமாரை அணுகினர். அவரும், தலைக்கு 4 லட்ச ரூபாய் என்று வாங்கி, அந்தப் பணத்தில், சென்னை எழும்பூர், மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை ஆகிய இடங்களில், தனது மனைவியின் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.
ஆனால், பணம் கொடுத்த யாருக்கும், வேலை வாங்கித் தரவில்லை. இதனால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவரிடம் சென்று பணத்தைக் கேட்டபடி இருந்தனர்.
இந்த நிலையில், செல்வராஜ்குமார் திடீரென்று, மரணம் அடைந்தார். இவரது மனைவி அமுதா, செவல்பட்டி அரசுப் பள்ளில் ஆசிரியையாக உள்ளார். இவரிடம் சென்று பணம் கேட்டதற்கு, “நீ என்னிடமா பணம் கொடுத்தாய்? செத்தவரிடம் போய்க் கேள்” என்று எகத்தாளமாகக் கூறி உள்ளார்.
இதனால், பணம் கொடுத்து ஏமாந்த நுாற்றுக் கணக்கானோர், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் சென்று, செல்வராஜ்குமாரின் பணப் பலனை நிறுத்தி வைக்கவும், அவரது மனைவி அமுதாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர்.
English Summary
MONEY SCAM IN VIRUTHUNAKAR COUPLE