மாமனாருடன் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்த இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூர தாய்!.
mom killed her child for hier illegal affairs
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி ஜெயந்தி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார்.
தனசேகர் மனைவி ஜெயந்திக்கு அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுடன் பழக்கம் இருந்துள்ளது. மாமனார் என்பவர் தந்தைக்கு நிகரானவர் என்பதை மறந்து இருவரும் கள்ளக்காதல் செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தனசேகர் மனைவி ஜெயந்தி கோபாலகிருஷ்ணனுடன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
லாட்ஜில் இருவரும் தனிமையில் உல்லாசமாய் இருக்க தடையாய் இருந்த குழந்தைகளையும் முகத்தில் தலையணையை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு சென்று வெகுநாளாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லையே என்ற சந்தேகத்தில் ஜெயந்தியின் உறவினர்கள் தேட ஆரம்பித்தனர்.
அவர்கள் தேடுவதை அறிந்த இருவரும் அங்கிருந்து தப்பி சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். குன்றத்தூர் அபிராமியை மிஞ்சும் விதமாக நடந்துகொண்ட கொடூர தாய் ஜெயந்தியின் செயல் அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
mom killed her child for hier illegal affairs