தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி!! தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் எதில் தெரியுமா?!
modi surprised Tamilnadu peoples
வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில், தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வண்டலூரில் மாபெரும் தேசிய மாநாடு மோடி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி அறிவித்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.
மேலும், "தமிழகதிற்கு வந்து செல்லும் விமானங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்திலும் தமிழ்மொழியில் அறிவிப்பு வெளியிடப்படும்" என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும், தமிழர்களின் பெருமைகளை கூறி மகிழ்ந்ததோடு, தமிழக மக்கள் மிகவும் நல்ல மனம் கொண்டவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
English Summary
modi surprised Tamilnadu peoples