சென்னையில் தாமரையுடன் வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடி.!
modi participate road show in chennai
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, ஏழாவது முறையாக தமிழகம் வந்துள்ளார். இதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்று அங்கு, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் கையில் தாமரை சின்னத்துடன் பங்கேற்று வருகிறார்.
இந்த பேரணியின்போது, பா.ஜனதா வேட்பாளர்கள் பால்கனகராஜ், வினோஜ் பி.செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.பாலகணபதி, பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு, ஜோதி வெங்கடேசன், த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். இதற்கிடையே பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியில் மூன்று ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
English Summary
modi participate road show in chennai