மீண்டும் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி!! மதுரையில் பலத்த பாதுகாப்பு!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார். தேனி மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று கோவையில் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார். 

இந்நிலையில் தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக, தனி விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார் மோடி. மதுரையில் பிரதமர் வருகையை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக என பலம்வாய்ந்த கூட்டணியாக இருப்பதால். மோடி தமிழகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் மோடியை வரவேற்ற பின்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi came to madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->