சூடுபறக்கும் தேர்தல் பிரச்சாரம்! பேண்ட், டி-ஷர்ட் என யூத்தாக களமிறங்கி மக்களை அதிரவைத்த முக ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் போட்டி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் பகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை டி-ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்பொழுது தர்மபுரி 4 ரோடு வழியாக நடந்து உழவர் சந்தைக்கு சென்ற ஆவர் அங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவரிகளிடம் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் மேற்கொண்டார். 

அதை தொடர்ந்து அங்குள்ள ஆவின் பகுதிக்குச் சென்று தொண்டர்களுடன் அமர்ந்து டீ குடித்த அவர், பின்னர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நடந்தே சென்றார்.

 மேலும் அவர் நடந்து செல்லும் வழியெல்லாம் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார் . மேலும் இளைஞர்களும் மாணவர்களும் அவர்களுடன் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து முக ஸ்டாலின் இன்று கச்சேரி மேட்டில் திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin collecting vote in tharmapuri market


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->