உடல் அழுகி கண், வாய், மூக்கை மீன்கள் கொத்தி தின்றது - விகாரமான முகம் : குமரி வாலிபருக்கு நேரிட்ட விபரீதம்..!
missed person dead body taken from lake
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடி சுப்ரமணியபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சபரி சரவணன் (21). கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
இவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என இவரது உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஆற்றுப் பகுதியில் இவரது உடல் சடலமாக மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடம் வந்த காவல் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை தண்ணீரில் இருந்து மீட்டனர்.இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் மாயமான சபரி சரவணன் என்பது உறுதியானது.
அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரில் கவிழ்ந்தநிலையிலேயே இறந்து கிடந்ததால் அவரது உடல் அழுகி கண் வாய் மூக்கு பகுதிகளை மீன்கள் கொத்தி தின்னஆரம்பித்து விட்டன.
இதனால் முகம் விகாரமாக காட்சியளித்தது. இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக சபரி சரவணனின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
missed person dead body taken from lake