எப்படி இருந்த திமுக.,!! இன்று இப்படி ஆகிவிட்டதே?!  - Seithipunal
Seithipunal


இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் ஆட்களையே பார்க்க முடியவில்லை. சேர்கள் முக்கால்வாசி காலியாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அவருடைய பேச்சு தான்.

முன்பெல்லாம் கலைஞர் பேச வருகிறார் என்றால், அவரது பேச்சினை கேட்கவே ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், ஸ்டாலினின் பேச்சு மிகவும் நகைச்சுவையாக உள்ளது, காது கொடுத்து கேட்பதற்கே விருப்பம் வரமாட்டேன் என்கிறது. முன்னாள் பிரதமர் சோனியா ஜி என உளறுகிறார்.

Image result for sellur raju seithipunal

எப்படி இருந்த திமுக?  ஸ்டாலினால் இன்று இப்படி ஆகிவிட்டது? திமுகவின் பேச்சாளர்கள் யார் வந்தாலும் முன்பெல்லாம் அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால், இன்று ஒன்றுமே பேச தெரியாத ஒரு தலைவரை அறிமுகப் படுத்துகிறோம் என்று திமுகவின் மூத்த தலைவர்களே மனம் புழுங்கும் நிலை உருவாகியுள்ளது.

அவர்களது கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. இன்னொன்று பரிசு பெட்டி கூட்டணி, அவர்கள் பரிசு கொடுத்து பழக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு அதுவே சின்னமாகவும் கிடைத்துள்ளது. மிகவும் பொருத்தமானதாகும். 

தினகரனை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. சீமான், கமல் எல்லாம் கட்சி தொடங்கி பிரச்சாரம் என்ற பெயரில் ஏதோ செய்து கொண்டுள்ளனர். தினகரனையும் அப்படித்தான் மக்கள் பார்க்க வேண்டும்." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Says about Dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->