வினாடிக்கு 1 இலட்சம் கனஅடி.! விரைவில் மேட்டூர் அணை திறப்பு.!! விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி.!!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு வார காலமாகவே கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிக்கின்றன. இதனால் அந்த அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 1 இலட்சம் கனஅடி என்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இன்னும் ஓர் இரு தினங்களில் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கபடலாம் என தெரிகிறது.

124 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடியை தொட்டு மேலும் உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து சுமார் விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 60 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஒகேனக்கல்லில் காவிரிக்கு நீர்வரத்து விநாடிக்கு  1 இலட்சம் கனஅடியாக நீர் வருவதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளக்காடாக உள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும்,பரிசல்களை இயக்கவும் 7 -வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு இலட்சம் ஆயிரம் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக மேட்டூர் அணை 90 அடி எட்டிய உடன் திறக்கப்படுவது வழக்கம். இதே நிலை நீடித்தால் விரைவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை ஒரு இரு நாளில் எட்டிவிடும். எனவே ஒரு இரு நாளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

METTUR DAM OPEN IN 1 OR 2 DAYs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->