நாளை இரவு வரை இலவச பயணம்.! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்று ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள், பின்  ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வந்தார். திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், முதல்முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து விமரிசனம் செய்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி அவர்கள், 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல்-டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், இன்று தொடங்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் இன்று (10.2.2019) மாலை 6 மணி முதல் நாளை  (11.2.2019) இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த இலவச பயணமானது, சென்னையின் உள்ள அனைத்து மெட்ரோ தடங்களிலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

METRO FREE IN ONE DAY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->