கொட்டித்தீர்த்த மழையால் வீட்டிற்குள்ளும், பள்ளிக்கூடத்திற்குள்ளும் புகுந்த வெள்ளம்!. - Seithipunal
Seithipunal


 தமிழகத்தில் பல இடங்களில் மழை பரவலாக பெய்துவருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்ததால் அணைத்து குளங்களும் ஏரிகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக இப்பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி நிலவி வந்தது. 

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால்  வீடுகளின் சுற்றுச்சுவர்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது. மேலும் ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இந்த கன மழையால் பள்ளியின் சுற்றுச் சுவர்களும் உடைந்து சேதம் அடைந்தது. தெருக்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

அப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் நிலத்தடி நீர் குறைவால் விவசாயத்தையும் நிறுத்தி கஷ்டப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது பெய்துவரும் மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Many years later, heavy rains flooded


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->