காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரிமளம் பள்ளியில் கோலாகல கொண்டாட்டம்!. போட்டிகளில் மாணவ மாணவிகள் பரிசு பெற்றனர்!.
காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல போட்டிகளை பள்ளியில் நடத்தியுள்ளனர்.
காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக்தின் பல பள்ளிகளில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2000 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழா இப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அப்பள்ளியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி என்று பல போட்டிகளை நடத்தி வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.
ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். அங்கு நடந்த பேச்சுப்போட்டியில், சுந்தராம்பாள் மற்றும் சஹானா என்ற மாணவிகள் வெற்றிபெற்று பரிசுகளை பெற்றனர். பாட்டுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வித்யா மீனாக்ஷி என்ற மாணவி வெற்றிபெற்று பரிசுகளை பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளியின் நிறுவனர் P.தங்கவேலு, தாளாளர் T.சபரி தங்கவேலு ஆகியோர்,பள்ளியின் முதல்வர் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர் ஆசிரியை முன்னிலையில் பரிசுகளை வழங்கினர்.
அங்கு நடந்த விழாவினை அந்த ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அப்பள்ளியில் தேசத்தலைவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் மாணவ மாணவிகளுக்கு பல போட்டிகளை நடத்தி சிறப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
English Summary
Many competitions are held at school in Kamaraj's 116th birthday party.