கள்ளக்காதலனிடம் பேசிய மனைவியை கண்டித்த கணவன்.! மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை.!! கள்ளக்காதலியை இழந்த கள்ளகாதலனும் தூக்கிட்டு தற்கொலை!!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியை சேர்ந்த முருகராஜ். இவர் தூத்துக்குடி, புதியம்புத்தூரில் உள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், வேப்பமரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

மேலும், இவர்கள் இருவரும் செங்கல் சூளை அருகே அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இந்த செய்தி, செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்கள் மூலம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவர, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். அதனை பொருட்படுத்தாத மனைவி, முருகராஜுடன் கள்ளக்காதலை செல்போன் மூலம் தொடர்ந்துள்ளார்.

இதனை அறிந்த, அந்த பெண்ணின் கணவர் மீண்டும் தனது மனைவியை கண்டித்தார். இதனால் தனது கள்ளக்காதலனுடன் பேச முடியாமல் மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்த முருகராஜ், மன உளைச்சல் ஏற்பட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவரம் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man suicide for his lover death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->