வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக நடனமாடிய மர்மநபர், தட்டி கேட்கவந்த காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!
வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக நடனமாடிய மர்மநபர், தட்டி கேட்கவந்த காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!
தேவாலயம் முன் நிர்வாணமாக நடனமாடிய நபர் ஒருவர், அங்கு வந்த காவலாளி மீது கல்லைப் போட்டுவிட்டு மீண்டும் நிர்வாணமாகவே நடனமாடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பரகுன்று என்ற ஊரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜ், இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் இரவு பணியில் இருந்தபோது,
மர்மநபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்து அங்கு வந்துள்ளார். பின்னர் அங்குமிங்கும் ஓடித் திரிந்த அவர், திடீரென தேவாலயம் முன் நடனமாடினார்.
இதைப் பார்த்த காவலாளி சுந்தர்ராஜ்,அங்கு வந்து அந்த மர்மநபரை அங்கிருந்து போக சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அப்பொழுது காவலாளியை நோக்கிச் வந்த அந்த நபர், திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, பெரிய கல் ஒன்றை தூக்கி சுந்தர்ராஜின் வயிற்றில் போட்டுள்ளார்.பின்னர் அந்த கல்லை காவலாளியின் மார்பு மற்றும் தலையிலும் போட்டுவிட்டு, நிர்வாணமாக தேவாலயம் முன் நின்று கொண்டார்.
பின்னர் காவலாளியை தாக்கிய அந்த கல்லை சிறிது நேரம் தேவாலயம் முன்வைத்த அவர், பின்னர் அந்த கல்லை தூக்கி புதருக்குள் வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுந்தர்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மேலும் அதேநபர் கார்களின் கண்ணாடியை உடைத்ததாகவும், சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man nude dance and killed church security