நண்பரின் பிறந்த குழந்தையை காண வந்த இளைஞர், மதுகுடித்து குளித்த இடத்தில் மூழ்கி பலியான சோகம்!
நண்பரின் பிறந்த குழந்தையை காண வந்த இளைஞர், மதுகுடித்து குளித்த இடத்தில் மூழ்கி பலியான சோகம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே உள்ள மட்டப்பாறையைச் சேர்ந்தவர் குமார். இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையைக் காண்பதற்காக, குமார், தன்னுடன் பணியாற்றி வரும், நண்பர்களான, செண்பகமூர்த்தி (வயது 27) மீனாட்சிபுரம் முத்துராஜ் (வயது 24), மட்டப்பாளை கார்த்திக் (வயது 26) ஆகிய மூவருடன் சென்றார்.
ஊருக்கு வந்து, மனைவி குழந்தையைப் பார்த்து விட்டு, பின் நால்வரும், மாவூர் அணைப் பகுதியில் உள்ள சோலைக்குள் அமர்ந்து, மது அருந்தினர். பின்னர் நால்வரும், மாவூர் அணையின் தண்ணீர் தேங்கி இருந்த பகுதிக்கு குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, செண்பகமூர்த்தியைத் திடீரென்று காணவில்லை.
இதனால், பதறிப் போன மற்ற மூவரும், அவரைத் தேடினர். அவரைக் கண்டு பிடிக்க முடியாததால், தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் அனுப்பினர். இந்த தகவல் அடிப்படையில், நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீ அணைப்பு வீரர்கள், செண்பகமூர்த்தியின் உடலை தேடி வருகின்றனர். இது குறித்து, அம்மையநாயக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
man died in water when path in dam