திருமணம் செய்து கொள்ள, வற்புறுத்திய கள்ளக் காதலியைக் கொன்ற மதுரை வாலிபர்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், மேலுார் அருகே உள்ள கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 27). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக, கூடங்குளம் அருகே உள்ள, தனியார் மணல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    
இவருடன் கூடங்குளம், ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்த, பொன்ராணி (வயது 29) என்ற பெண்ணும் வேலை பார்த்தார். பொன்ராணிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன.
    
இவரது கணவர், ஜெயகிருஷ்ணன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மணல் கம்பெனியில் வேலை பார்த்த போது, பொன்ராணிக்கு தேவையான உதவிகளைச் செய்து வந்தார் கோகுல். இதனால், பொன்ராணியின் வீட்டிற்கு அடிக்கடி செல்வார்.
    
நாளடைவில் இந்த நட்பு கள்ளக் காதலாக மாறியது. கணவன் வெளி நாட்டில் இருந்ததால், பொன்ராணிக்கு கள்ளக்காதலை வளர்க்க வசதியாகப் போனது. கடந்த சில ஆண்டுகளாக, இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.
    
இந்த நிலையில், திடீரென்று, அந்த மணல் கம்பெனியை மூடப் பட்டதால், கோகுல், தன் சொந்த ஊரான, மதுரை கொட்டாம்பட்டிக்கு சென்று விட்டார். கள்ளக் காதலையும் மறந்து விட்டார்.
    
ஆனால், பொன்ராணி, அடிக்கடி கோகுலிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.  கோகுலைக் காண கொட்டாம்பட்டிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
    
இதற்கிடையே, கடந்த 9-ஆம் தேதி, கொட்டாம்பட்டியில், கோகுலைச் சந்தித்த பொன்ராணி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி, கோகுலை வற்புறுத்தி உள்ளார்.
    
இதனால், எரிச்சல் அடைந்த கோகுல், பொன் ராணியிடம், நைசாகப் பேசி, கொட்டாம்பட்டியில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, பொன்ராணியைக் கட்டையால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்தார்.
    
பிணத்தைக் கைப்பற்றிய கொட்டாம்பட்டி போலீசார், ஒரு வாரமாக விசாரணை செய்து வந்தனர். பொன்ராணியின் செல்போனை ஆய்வு செய்த போது, கோகுல் பிடிபட்டு, கைது செய்யப் பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai younger who killed a lover


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->