சற்றுமுன் பட்டப்பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடன்!! தனி ஒருவனாக ஆயுதப்படை காவலர் செய்த செயல்!!
madurai police catched robber
சமீபகாலமாக பல இடங்களில் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்கள் என பணம் மற்றும் தங்க நகையை பறிக்கும் கும்பல்கள் பலரிடம் வழிப்பறி செய்து தப்பியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் இன்று 29.3.2019 மதுரை மாநகர் ஆயுதப்படை காவலர் மகா பாண்டி என்பவர் பாதுகாப்பு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு செல்லும் பொழுது, மதுரை மாநகர் திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியார் பேருந்து நிலையம் அருகில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடன் நின்று கொண்டிருந்துள்ளான்.
அந்த திருடனை பார்த்த மதுரை மாநகர் ஆயுதப்படை காவலர் மகா பாண்டி, சுமார் 2 கி மீ தூரம் தனி ஆளாக துரத்தி சென்று அந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இவரின் செயலை பார்த்து பொதுமக்களும் பாராட்டியுள்ளனர். இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஆயுதப்படை காவலர் மகா பாண்டியனை பாராட்டியுள்ளார்.
English Summary
madurai police catched robber