சர்ச்சை பேச்சு.. பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு.!! மதுரை போலீஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசி இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தியும் மத்திய இணை அமைச்சர் ஷோபா மற்றும் பாஜக மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

அதேபோன்று மதுரை திமுக சார்பில் வெறுப்பூட்டும் பேச்சால் பகை வளர்த்து இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்துறையினர் 4 பிரிவுகளின் வழக்கப்பதிவு செய்துள்ளனர். அதன்படி சட்டப்பிரிவு 153, 153 ஏ, 505 (1பி), 505 (2) ஆகிய பிரிவுகளுக்கு மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai police case filed against Central minister Sobha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->