மதுரையில் நடந்த பரிதாபம்! திருமணம் முடிந்த வேகத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!  - Seithipunal
Seithipunal


சத்தம் போட்டுச் சொன்னாலும், சட்டம் போட்டுச்சொன்னாலும், இன்னும் நம் மக்களை அறியாமை என்ற பேய் ஆட்டி வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

சமீப காலமாக, பல சிறுமியருக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்தன்று தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ஆனாலும், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், சீக்கிரம் தங்கள் கடமையை முடித்து விட வேண்டும் என்ற அவசர கதியில், அவர்களே, சில சமயம் தங்கள் குழந்தைக்கு எமன் ஆகி விடுகிறார்கள்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சீல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா.(வயது 26). இவருக்கும், மல்லபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால், இந்த திருமணத்தில், அந்த சிறுமிக்கு விருப்பம் இல்லை. அவர் தன் பெற்றோரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர்கள், பிடிவாதமாக இருந்து விட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை, மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பெருமாள் கோயிலில் அந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை, மணமகள், மறு வீடு செல்லும் நிகழ்ச்சிக்காக, அந்த சிறுமியைக் கிளப்பிக் கொண்டிருந்தனர். ஆடை மாற்றி விட்டு வருகிறேன், என்று சொன்ன அந்த சிறுமி, வீட்டிற்குள் சென்று, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai one Girls Is Suicide After Marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->