மதுரை இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


மதுரையில் உள்ள பிரதான பகுதியை சார்ந்தவர் முருகன். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த கவுசல்யா (வயது 22) என்ற பெண்ணிற்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. 

கவுசல்யா தனியாக பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால்., கணவர் பணிக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்து வருவது வழக்கம். 

இவர்கள் வசித்து வரும் நகரில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்று விட்டு இல்லத்திற்கு கவுசல்யா வந்த நிலையில்., கணவர் முருகன் பணிக்கு சென்றுள்ளார். இரவு வீட்டில் தனியாக கவுசல்யா இருந்த நிலையில்., காலையில் வெகு நேரமாகியும் கடை திறக்கப்படாததால் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். 

அந்த சமயத்தில் கவுசல்யா அசைவற்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது., கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சிடைந்த காவல் துறையினர்., அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில்., கோவிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு வருகை தந்த இவர் நகைகளை அணிந்து வந்திருந்த நிலையில்., இவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரை பின்தொடர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்ற தகவலானது வெளியானது.

இந்த நிலையில்., இது குறித்த தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் கவுசல்யாவின் உறவினரான விஜயகுமாரிடம் (வயது 45) விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., காவல் துறையினரின் கேள்விகளுக்கு மாற்றி மாற்றி பதிலை வழங்கியுள்ளார். 

இவரின் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையை அடுத்து., குடும்ப பிரச்சனையின் காரணமாக கவுசல்யாவை கொலை செய்து விட்டு., பின்னர் அவரிடம் இருந்த நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விஜயகுமாரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai girl killing case will end to kill by her relation due to family problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->