காதல் திருமணத்தால் நேர்ந்த சோகம்..! பெண்ணின் பிணத்தை சாலையில் வைத்துக் கொண்டு, உறவினர்கள் சாலை மறியல்.!!
காதல் திருமணத்தால் நேர்ந்த சோகம்..! பெண்ணின் பிணத்தை சாலையில் வைத்துக் கொண்டு, உறவினர்கள் சாலை மறியல்.!!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே, சேத்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர், கணேசன் மகள் முத்துமணி (வயது 23).
இவருக்கு சிவகங்கை மாவட்டம், எட்டயக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரை முதல் திருமணம் செய்திருந்தார். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான சிறுது காலத்திலேயே, விவாகரத்து வாங்கிக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
அதன் பிறகு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ளஒரு கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனன் என்பவருடன் பழகினார். பின் அந்த நட்பு காதலாக மாறியது. அடுத்து, பெற்றோரிடம் சொல்லி, மயில்வாகனனைத் திருமணம் செய்து கொண்டார் முத்துமணி.
இவர்கள் திருமணம் செய்து, ஆர்.எஸ். மங்கலம் பாரதி தெருவில் வாடகை வீட்டில், தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். என்ன பிரச்சினையோ தெரியவி்ல்லை, நேற்று, தன் வீட்டில், மின் விசிறியில் துாக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார், முத்துமணி.
தகவல் அறிந்த ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை, திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்து, வாகனத்தில், முத்துமணியின் உடலைக் கொண்டு சென்ற, அவரது உறவினர்கள், ஆர்.எஸ். மங்கலம் பேருந்து நிலையம் அருகே, வண்டியை நிறுத்தி, பிணத்தை ரோட்டில் இறக்கி வைத்து, முத்துமணியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அதற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ். மங்கலம், இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனே உரிய நடவடிக்கையை எடுப்பதாக வாக்குறுதி அளித்த பின்னரே, உடலை எடுத்துச் சென்றனர்.
English Summary
Love Marriage After Death Women What Problem