கும்பகோணம் அருகே பரபரப்பு!! காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிகள் எடுத்த விபரீத முடிவு!! - Seithipunal
Seithipunal


கும்பகோணத்திற்கு அருகே உள்ள காவல்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் அவரது மகன் சந்திரன்(24). அதே ஊரை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகள் ரஞ்சிதா(21). இவர்கள் இருவரும் காதலித்து வந்து உள்ளனர்.

அவர்கள் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இரு குடும்பத்தினரும், அவர்களுடைய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மனவேதனை அடைந்த அவர்கள், தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதனால் இருவரும் நேற்று மதியம் ஒன்று சேர்ந்து பூச்சி மருந்தை குடித்தனர்.

அவர்கள் மயங்கி விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களை கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love couple attempt suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->