காதலித்த காரணத்தால் காட்டிக்கொடுத்த நண்பனால் கம்பி என்னும் இளைஞன்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் இனியன் (வயது 25). இவருக்கு ஒரு நண்பன் இருந்தார். அவரது பெயர் ஜெயபாலன். இனியனும், ஜெயபாலனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரும் அடிக்கடி ராஜபாளையம் காட்டுப் பகுதிக்குள் வேட்டையாடச் சென்று வருவர். அப்போது, இனியன் வசம் நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்துப் பொருட்கள் எல்லாம் இருக்கும்.

இந்த நிலையில், ஜெயபாலனின் உறவுக்காரப் பெண்ணை, இனியன் காதலித்தார். இது ஜெயபாலனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, தன் நண்பனிடம் அந்தக் காதலை விட்டு விடும்படி கேட்டார். ஆனால், இனியன் மறுத்து விட்டார். அப்போதிலிருந்து, இருவரும் பரம எதிரி ஆனார்கள். இந்தக் காதல் விவகாரத்தை, அந்தப் பெண்ணின் தந்தையிடம் போட்டுக் கொடுத்தார், ஜெயபாலன். அதனால், அவரும், ஜெயபாலனும் இனியன் மீது சேத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது, விசாரணையில், ஜெயபாலன், இனியன் தன் வீட்டில் வெடி குண்டு மற்றும் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக புகார் தெரிவித்தார். இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, சேத்துார் எஸ்.ஐ. குருசாமி மற்றும் போலீசார், இனியன் வீட்டிற்குள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு, வெடிமருந்து தயாரிப்பதற்காக மூலப் பொருட்கள் எல்லாம் அந்த வீட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை எல்லாம் கைப்பற்றி, இனியனையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரரண நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love breaks friendship


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->