பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களை மிரட்டும் லோக்கல் அ.தி.மு.க. பிரமுகர்கள்….! “எம்.எல்.ஏ-வைப் பாத்துட்டு அப்புறம் ஸ்கூலுக்குப் போங்க”
Local ADMK people threatening the teachers
கடந்த 22-ஆம் தேதி முதல், தமிழக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவரும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது, முதல்வர் மற்றும் ஸ்டாலின் அறிவுரைகளின் படி, பணி புரிய பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படிப் பள்ளிக்குத் திரும்பும் ஆசிரியர்களை, லோக்கல் அதிமுக-வினர் மிரட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிக்கு, ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் கும்பலாக அந்தப் பள்ளிக்குள் சென்றனர். பின், அங்குள்ள ஆசிரியர்களைப் பார்த்து, “முதல்லே மொடக்குறிச்சி எம்.எல்.ஏ- சிவசுப்ரமணியத்தைப் பாத்துட்டு, அப்புறம் டூட்டியைப் பாருங்க” என்றனர்.
அதற்கு ஆசிரியர்கள், “நாங்கள் ஏன் எம்.எல்.ஏ-வைப் பாக்கனும்? என்றனர். அதற்கு, அவர்கள், இனி இங்கு வேலை பாக்குற டெம்பரரி டீச்சருக்கு நீங்கள் தான் சம்பளம் தரனும், என்றனர்.
இதைக் கேட்டு, கொதிப்படைந்த ஆசிரியர்கள், அரசாங்கம் நியமத்த ஆசிரியருக்கு, நாங்க எதுக்கு சம்பளம் தரனும்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசில் புகார் அளிப்பதாகக் கூறியதும், அந்த அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
English Summary
Local ADMK people threatening the teachers