சாக்குப்பையை தைப்பது போல இறந்தவரின் உடலை தைத்து விட்டு, மருத்துவமனையில் நடக்கும் கூத்து..!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் ,துறையூர் அரசு மருத்துவ மனையின் அலட்சிய போக்கான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ,துறையூர் அரசு மருத்துவ மனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துறையூர் வட்டத்தில் கிணற்றில் விழுந்து பலியான ஒருவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய வந்துள்ளது.

அப்போது பரிசோதனை செய்து பின்பு மருத்துவமனை பணியாளர் உடலை தைக்காமல் காண்டிராக்ட் அடிப்படையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளி வாலீஸ் புரத்தை சேர்ந்த வீரமணி என்பவர் இறந்தவர் உடலை தைத்துள்ளார்.

பின்னர் இதனை வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்தும், பணி நேரத்தில் நோயாளிகளை கவனிக்காமல் அரட்டையடித்துக்கொண்டு இருந்துள்ளனர் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laundry-worker-doing-postmortem-at-government-hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->