தனக்கு நிலத்தை விற்றவரே..! போலி ஆவணம் மூலம் மற்றவருக்கு விற்று மோசடி செய்ததால்..!! விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!!!
தனக்கு நிலத்தை விற்றவரே..! போலி ஆவணம் மூலம் மற்றவருக்கு விற்று மோசடி செய்ததால்..!! விவசாயி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!!!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி (வயது 65). இவரது தந்தை 1979-ஆம் ஆண்டு, ரெங்கம்மாள் என்பவரிடம் நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
தந்தை இறந்ததும், பால்சாமி, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இதற்கிடையே, இந்த நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது, என்று கூறி, ஆதி திராவிடர் நலத் துறையினர், நிலத்தை அளக்க வந்துள்ளனர்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்சாமி, நிலம் தன் தந்தையின் பெயரில் இருந்ததைப் பத்திரத்தின் மூலம் காட்டி உள்ளார். ஆனால், இதற்கிடையே, கேரளாவைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர், ரெங்கம்மாளிடம் இருந்து, போலி ஆவணம் மூலமாக இந்த நிலத்தை வாங்கி அரசாங்கத்திற்கு விற்றிருக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்டு, மனம் உடைந்து போனார் பால்சாமி. தனக்கும் தன் குடும்பத்திற்கும், ஆதரவாக இருந்தது, இந்த நிலம் மட்டும் தான். அதனால், இது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு செய்திருக்கிறார்.
ஆனால், இது வரை, எந்த பதிலும் இல்லை. இதனால் வெறுத்துப் போன பால்சாமி, நேற்று, கலெக்டர் அலுவலகத்திற்கு, தனது மனைவி ராமுத்தாய், மகன் செல்வராஜ், மகள் சந்திரகலா, மருமகள் நாகரத்தினம், பேரன் ஆதிகேசவன் ஆகியோருடன் வந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்டு, போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்த நிலத்தைத் தவிர, எங்களுக்கு வாழ வேறு வழி இல்லாததால், சாவதைத் தவிர வேறு வழி இல்லை, என்று பரிதாபமாகக் கூறினார், பால்சாமி.
English Summary
LAND SCAM FAMILY MAN SUICIDE ATTEMPT