பண்ருட்டியில் நடந்த கோர சம்பவம்.! இளம்பெண் காவல்நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலை.!! இறப்பதற்கு முன் கள்ளக்காதலன் குறித்து அளித்த பரபரப்பு வாக்குமூலம்.!!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடந்து வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும், கள்ளக்காதல் செய்து வரும் சம்பவமும் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பல கோர சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், பண்ருட்டியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ், டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி. இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், மேனகாதேவி என்ற மகளும் உள்ளனர். இவர்களின் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவருக்கும் தமிழ்செல்விக்கும் கள்ளகாதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், விசாரணைக்காக இவ்விரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியிருந்ததால், தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி காவல் நிலையதிற்கு அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

மேலும், போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி, தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  பக்கத்து வீடு என்பதால் எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் செல்வாகுமார் அடிக்கடி வீட்டிற்கு வருவார்.

மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்கு வந்தவர், ஒருநாள்  என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். அதேபோல், பலமுறை என்னை மிரட்டி அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் தான் நான் சாவும் முடிவை எடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lady suicide at panruti police station opposite


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->