2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தனசேகரன் (59). இவர் கடந்த ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தனசேகரனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தனசேகரனுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer sentenced to life in prison for sexually harassing 2 girls in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->