நள்ளிரவில் ஒன்று திரண்ட மக்கள்.! கண்டெய்னர் லாரியில் பணம்... சிறைபிடித்த மக்கள் .!! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் ஆத்துப்பாலம் அருகே சாலையில் தாறுமாறாக கண்டெய்னர் லாரி சென்றது.  அப்போது லாரியில் பணம் இருப்பதாக வதந்தி மக்கள் மத்தியில் பரபரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகமாக அந்த இடத்தில் கூடினர். 

அந்த கண்டெய்னர் லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள், லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்தப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் அந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக கூறிய நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறந்தாள் சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று கூறி, அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். 

பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பொதுமக்களை கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai people stop container lorry


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->