காவேரிக்காக களம் இறங்கி! சென்னையை கலக்கிய கல்யாண கோஷ்டி!
காவேரிக்காக களம் இறங்கி! சென்னையை கலக்கிய கல்யாண கோஷ்டி!
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், கல்யாணம் முடிந்த கையோடு காவிரி மேலாண்மைக்காக மறியலில் குதித்த புதுமண தம்பதியால், சென்னையில் பரபரப்பு!!!
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகரன் மற்றும் சரஸ்வதி ஆகியோர், வடபழனி முருகன் கோவிலில் குடும்பத்தினர் முன்னிலையில் இன்று காலை திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த புதுமணத் தம்பதி கையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என எழுதிய பதாகையுடன் கோவிலின் முன் போராட்டத்தில் குதித்தனர். இவர்களுடன் புதுமண தம்பதியின் குடும்பத்தாரும், உறவினர்களும் களத்தில் இறங்கினர்.
தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார்அவர்களிடம் பேசி, அவர்களை மறியலை கைவிட வைத்தனர். இந்த சம்பவத்தால் வடபழனி கோவில் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Kaveri PROTEST IN CHENNAI MARRED NEW COUPLE