தேவர் பெயரை விமான நிலையத்திற்கு வைக்கவில்லை என்றால், இது தான் நடக்கும்!! கருணாஸின் சர்ச்சை பேச்சு!!
karunas says about 2019 parliament
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள புதுக்கோட்டை வந்த நடிகரும், MLA வும் ஆன கருணாஸ், " பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கும்.
இந்த பதவி மக்கள் கொடுத்தது. மக்களுக்காக அதை இழக்கவும் தயங்க மாட்டேன். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். வரும் தேர்தலில் தினகரன் அதிமுகவை விட்டு பிரிந்துள்ளதால், அதிமுகவின் ஓட்டு பாதிப்பிற்கு உள்ளாகும்.
முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும். இல்லையெனில் தேர்தலில் அதன் பலனை பார்ப்பார்கள். தினகரனை திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்" என கூறியுள்ளார்.
நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என கமல் கூறியதை பற்றி வினவியதற்கு தமிழன் என்பது தான் தகுதி என கூறியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கவில்லையெனில் தேர்தலில் அதன் பலனை பார்ப்பார்கள். என கருணாஸ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பும் விதமாக அமைந்துள்ளது.
English Summary
karunas says about 2019 parliament