இன்ஸ்பெக்டரை ஆபாச வீடியோவில் சிக்க வைத்த பெண்..! வழக்கு கொடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த காவல்துறை அதிகாரி..!!
இன்ஸ்பெக்டரை ஆபாச வீடியோவில் சிக்க வைத்த பெண்..! வழக்கு கொடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த காவல்துறை அதிகாரி..!!
நாகர்கோயிலைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் மேல் உள்ள வழக்கு தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லில் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்து வந்த பென்சாமைச் சந்திக்க நேர்ந்தது.
அப்போது, அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரை, வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர், அடிக்கடி அந்தப் பெண்ணிடம் செல்போனில் பேசி உள்ளார்.
அவரது நோக்கம் வேறு மாதிரியாக இருந்ததை அறிந்த அந்தப் பெண், அந்த இன்ஸ்பெக்டருக்கு பாடம் புகட்ட விரும்பினார்.
அதன்படி, சமீபத்தில், இன்ஸ்பெக்டர் ஆபாசமாகப் பேசிய வீடியோ காலை, ரெக்கார்டு செய்தார், அந்தப் பெண். பின், அந்த வீடியோ காலில் உள்ள தன் முகத்தை மார்பிங் செய்து விட்டு, அந்த வீடியோவை, வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டார்.
இந்த வீடியோ, சமூக வலைத் தலங்களில் வைரலாகப் பரவியது. காவல் துறையிலும், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, விசாரணை நடத்த டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார். அதன்படி, அந்த ஆபாச வீடியோவில் சிக்கிய பென்சாம், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அதற்கான ஆணை, பென்சாமிடம் நேரடியாக வழங்கப் பட்டது.
ஏற்கனவே, இந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ- ஆக கியூ பிரான்ச் பிரிவில் பணியாற்றிய போது, சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின் மீண்டும், மன்னிப்புக் கடிதம் எழுதிப் பணியில் சேர்ந்தார், என்பது குறிப்பிடத் தக்கது.
நைசாகப் பேசி, இன்ஸ்பெக்டரைச் சிக்க வைத்த, அந்த வீடியோ போல், வேறு யாரும் மாட்டி விடக் கூடாது, என்று மற்ற போலீசார் எச்சரிக்கையாக உள்ளனர், என்ற செய்தியும் பரவி வருகிறது.
English Summary
Kanniyakumari District Women Complain police